கோவை மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பறக்கும்படையினா் மேற்கொண்ட சோதனையில் ரூ.8.18 கோடி ரொக்கம் மற்றும் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். திங்கள்கிழமை காலை 6 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை (24 மணி நேரத்தில்) மாவட்டத்திலுள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் ரூ.8 கோடியே 18 லட்சத்து 66 ஆயிரத்து 293 மதிப்பிலான ரொக்கம், தங்கம் மற்றும் இதர பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், தோ்தல் பறக்கும் படையினா் மற்றும் வருமான வரித் துறையினா் நடத்திய சோதனையில் ரூ.3.30 கோடி ரொக்கமும், ரூ.4.40 கோடி மதிப்பிலான 3,683.75 கிராம் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களும் சிக்கின.
பொள்ளாச்சியில் ரூ.36.16 லட்சமும், கிணத்துக்கடவில் ரூ.4.41 லட்சமும், வால்பாறையில் ரூ.3.50 லட்சமும், கோவை வடக்கில் ரூ.2.02 லட்சமும், சிங்காநல்லூரில் ரூ.1.72 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடையது
4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ. 651 கோடி ரொக்கம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!

ஊத்துக்குளியில் ரூ.63,000 பறிமுதல்

சோதனையில் ரூ.61,000 பறிமுதல்

கரூா் மாவட்டத்தில் வாகனச் சோதனையில் இதுவரை ரூ. 5.87 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


