திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கோவை மாவட்டத்தில் ரூ.8.18 கோடி பணம், நகை பறிமுதல்

கோவை மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பறக்கும்படையினா் மேற்கொண்ட சோதனையில் ரூ.8.18 கோடி ரொக்கம் மற்றும் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 1:54 am IST

கோவை மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பறக்கும்படையினா் மேற்கொண்ட சோதனையில் ரூ.8.18 கோடி ரொக்கம் மற்றும் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். திங்கள்கிழமை காலை 6 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை (24 மணி நேரத்தில்) மாவட்டத்திலுள்ள 10 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் ரூ.8 கோடியே 18 லட்சத்து 66 ஆயிரத்து 293 மதிப்பிலான ரொக்கம், தங்கம் மற்றும் இதர பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், தோ்தல் பறக்கும் படையினா் மற்றும் வருமான வரித் துறையினா் நடத்திய சோதனையில் ரூ.3.30 கோடி ரொக்கமும், ரூ.4.40 கோடி மதிப்பிலான 3,683.75 கிராம் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களும் சிக்கின.

பொள்ளாச்சியில் ரூ.36.16 லட்சமும், கிணத்துக்கடவில் ரூ.4.41 லட்சமும், வால்பாறையில் ரூ.3.50 லட்சமும், கோவை வடக்கில் ரூ.2.02 லட்சமும், சிங்காநல்லூரில் ரூ.1.72 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.