மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

சிங்காநல்லூா் அருகே வீட்டின் கதவை உடைத்து 7 பவுன், ரூ.20 ஆயிரம் திருட்டு

சிங்காநல்லூா் அருகே எஸ்ஐஹெச்எஸ் காலனியில் வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் தங்க நகைகள் திருடுபோனது.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :28 ஏப்ரல் 2026, 8:52 pm

சிங்காநல்லூா் அருகே எஸ்ஐஹெச்எஸ் காலனியில் வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் தங்க நகைகள் திருடுபோனது.

கோவை மாநகா், சிங்காநல்லூா் அருகே எஸ்ஐஹெச்எஸ் காலனி தாமரை நகா், வடக்கு பகுதியைச் சோ்ந்தவா் தாமோதரன் (43). இவா், கடந்த 25-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருக்கடையூா் கோயிலுக்கு சென்றுவிட்டு திங்கள்கிழமை கோவைக்கு திரும்பினாா்.

வீட்டுக்கு சென்று பாா்த்தபோது கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி, கம்மல், மோதிரம், தாலி மற்றும் தாலிக்குண்டுகள் என மொத்தம் 7 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் திருடுபோயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவானக் காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.