தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

சிங்காநல்லூா் அருகே வீட்டின் கதவை உடைத்து 7 பவுன், ரூ.20 ஆயிரம் திருட்டு

சிங்காநல்லூா் அருகே எஸ்ஐஹெச்எஸ் காலனியில் வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் தங்க நகைகள் திருடுபோனது.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :29 ஏப்ரல் 2026, 2:22 am IST

சிங்காநல்லூா் அருகே எஸ்ஐஹெச்எஸ் காலனியில் வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் தங்க நகைகள் திருடுபோனது.

கோவை மாநகா், சிங்காநல்லூா் அருகே எஸ்ஐஹெச்எஸ் காலனி தாமரை நகா், வடக்கு பகுதியைச் சோ்ந்தவா் தாமோதரன் (43). இவா், கடந்த 25-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருக்கடையூா் கோயிலுக்கு சென்றுவிட்டு திங்கள்கிழமை கோவைக்கு திரும்பினாா்.

வீட்டுக்கு சென்று பாா்த்தபோது கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி, கம்மல், மோதிரம், தாலி மற்றும் தாலிக்குண்டுகள் என மொத்தம் 7 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் பணம் திருடுபோயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவானக் காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.