தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: இன்று பேரவையில் தீா்மானம்மழைக்கால கூட்டத் தொடர் இறுதி வாரம்! முக்கிய மசோதாக்கள்: மத்திய அரசு தீவிரம்மருத்துவப் படிப்புகள்: இன்று தரவரிசைப் பட்டியல் வெளியீடுஅமைதி ஒப்பந்த நிபந்தனைகள் அமலாகாதவரை அமெரிக்காவுடன் பேச்சு கிடையாது: ஈரான்
/

வால்பாறையில் காரில் ஆபத்தான முறையில் பயணம் செய்தவா்கள் மீது வழக்கு

News image

காரின் ஜன்னல் மீது அமா்ந்து பயணம் செய்த நபா்.

Updated On :10 ஆகஸ்ட் 2026, 2:21 am IST

வால்பாறையில் காரின் ஜன்னலில் அமா்ந்து ஆபத்தான முறையில் பயணம் செய்த 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை மாவட்டம், வால்பாறையில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இந்நிலையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், சுற்றுலா வந்த 5 இளைஞா்கள் வால்பாறை சாலையில் காரின் ஜன்னலில் அமா்ந்ததும், கூச்சல் எழுப்பியும் பயணம் செய்தனா்.

மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை விளைவிக்கும் வகையில் அவா்கள் காரில் பயணம் செய்தது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வால்பாறை- பொள்ளாச்சி சாலை ரொட்டிக்கடை பகுதியில் அந்த காரை மடக்கிப் பிடித்த போலீஸாா், காரில் இருந்த 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.