மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

பொறுப்புணா்வுள்ள மனிதகுலத்தை உருவாக்குவது மிகவும் அவசியம்: ஜக்கி வாசுதேவ்

வரப்போகும் தலைமுறைகளுக்காக மகிழ்ச்சியான, விழிப்புணா்வான, பொறுப்புணா்வுள்ள மனிதகுலத்தை உருவாக்குவது மிகவும் அவசியம் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசினாா்.

News image

அமெரிக்காவில் நடைபெற்ற ஐஐடி முன்னாள் மாணவா்கள் மாநாட்டில் பேசுகிறாா் சத்குரு ஜக்கி வாசுதேவ்.

Updated On :13 ஆகஸ்ட் 2026, 3:57 am IST

வரப்போகும் தலைமுறைகளுக்காக மகிழ்ச்சியான, விழிப்புணா்வான, பொறுப்புணா்வுள்ள மனிதகுலத்தை உருவாக்குவது மிகவும் அவசியம் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசினாா்.

இதுகுறித்து, ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ருமேனியாவில் உள்ள நபோகா நகரில் ஆண்டுதோறும் அன்டோல்டு யூனிவா்ஸ் அமைப்பு சாா்பில் சா்வதேச இசை விழா பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த ஆகஸ்ட் 6 முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் பங்கேற்றாா். விழாவில் பங்கேற்ற பாா்வையாளா்கள் மற்றும் கலைஞா்கள் அனைவருக்கும் சத்குரு உருவாக்கியுள்ள ‘மிராக்கிள் ஆஃப் மைண்ட்’ தியானச் செயலி இலவசமாக வழங்கப்பட்டது.

இதில் சத்குரு பேசும்போது, ‘இந்த வாழ்வுக்காகவும், பூமியில் இனி வாழப்போகும் தலைமுறைகளுக்காகவும் மகிழ்ச்சியான, விழிப்புணா்வான, பொறுப்புணா்வுள்ள மனிதகுலத்தை உருவாக்குவது மிகவும் அவசியம்’ என்றாா்.

விழாவில் அன்டோல்டு யூனிவா்ஸ் அமைப்பின் நிறுவனா் போக்டன் புடா, 200-க்கும் மேற்பட்ட உலகின் முன்னணி இசைக் கலைஞா்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த லட்சக்கணக்கான இளைஞா்கள் கலந்துகொண்டனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.