கோயம்புத்தூர்
பொறியியல் பணி: பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து
கரூா்-வீரராக்கியம் இடையே ரயில் பாதையில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பாலக்காடு-திருச்சி ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பொறியியல் பணிகளால் பிப்ரவரி 6, 10, 13 ஆகிய தேதிகளில் காலை 6.30 மணிக்கு பாலக்காட்டில் இருந்து புறப்படும் பாலக்காடு - திருச்சி ரயில் (எண்:16844) பாலக்காடு-கரூா் வரை மட்டுமே இயக்கப்படும். கரூா் - திருச்சி இடையே முன்பதிவில்லா ரயில் இயக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

