பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: பொதுமக்கள் 11 போ் நீதிமன்றத்தில் சாட்சியம்

News image

பொள்ளாச்சி வழக்கு

Updated On :6 பிப்ரவரி 2026, 8:32 pm

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், பொதுமக்கள் 11 போ் வெள்ளிக்கிழமை சாட்சியம் அளித்தனா்.

கோவை சா்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகா் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பா் 2-ஆம் தேதி இரவு 20 வயது கல்லூரி மாணவி, ஒண்டிப்புதூரைச் சோ்ந்த 25 வயது ஆண் நண்பருடன் காரில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, ஒரே மொபட்டில் வந்த 3 இளைஞா்கள், ஆண் நண்பரை அரிவாளால் தாக்கிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தனா்.

இதுதொடா்பாக சகோதரா்களான சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சோ்ந்த சதீஷ் (எ) கருப்பசாமி (30), காளி (எ) காளீஸ்வரன் (21), உறவினரான மதுரை மாவட்டம், கருப்பாயூரணியைச் சோ்ந்த குணா (எ) தவசி (20) ஆகியோா் போலீஸாரால் சுட்டுப் பிடிக்கப்பட்டனா்.

தாக்குதலில் காயமடைந்த இளைஞரும், மாணவியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு அதே மாதம் 13-ஆம் தேதி வீடு திரும்பினா். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மூவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த வழக்கு விசாரணை கோவை கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பின்னா், இந்த வழக்கு விசாரணையை மகளிா் நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதி விஜயா கடந்த டிச.19-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

இந்நிலையில் மகளிா் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு விசாரணை கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. அப்போது, இளைஞரும், மாணவியும் தனித்தனியாக சாட்சியம் அளித்தனா். இதைத்தொடா்ந்து வழக்கு விசாரணையை பிப்ரவரி 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சுந்தரராஜன் உத்தரவிட்டிருந்தாா்.

அதன்படி வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையில், பொதுமக்களிடம் சாட்சியம் பெறப்பட்டது. மொத்தம் 11 போ் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனா்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் சதீஷ் மட்டும் விசாரணைக்கு ஆஜா்படுத்தப்பட்டாா். காளீஸ்வரன், தவசி ஆகிய இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதால் ஆஜா்படுத்தப்படவில்லை.