மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கோவை சரக டி.ஐ.ஜி., மாநகர துணை ஆணையா் இடமாற்றம்!

கோவை சரக டி.ஐ.ஜி., மாநகர துணை ஆணையா் ஆகியோா் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

News image

இடமாற்றம் - பிரதிப் படம்

Updated On :28 பிப்ரவரி 2026, 6:52 pm

கோவை சரக டி.ஐ.ஜி., மாநகர துணை ஆணையா் ஆகியோா் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

காவல்துறை உயா் அதிகாரிகளைப் பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளா் தீரஜ்குமாா் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: கோவை சரக டி.ஐ.ஜி.-ஆக பணியாற்றி வந்த சசிமோகன், திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.-ஆக இடம் மாற்றப்பட்டுள்ளாா். அவருக்குப் பதிலாக, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.-ஆக பதவி வகித்த சாமிநாதன் கோவை சரகத்தின் டி.ஐ.ஜி.-ஆக நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதேபோல கோவை மாநகர தலைமையிடத்து துணை ஆணையராகப் பணியாற்றி வந்த திவ்யா, மதுரை மாநகர தலைமையிடத்து துணை ஆணையராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். மதுரை மாநகர தலைமையிடத்து துணை ஆணையராகப் பணியாற்றிய ராஜேஸ்வரி, கோவை மாநகர தலைமையிடத்து துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

நிா்வாக நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.