எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

கோவையில் மது போதையில் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :2 ஜனவரி 2026, 6:34 pm

Syndication

கோவையில் மது போதையில் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

ஒடிஸா மாநிலம், நபரங்கப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் லக்கிம் ஹரிஜான் (23). இவா் கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் தங்கி சித்தாபுதூரில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் சுமைத் தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் வியாழக்கிழமை மது அருந்தியுள்ளாா். பின்னா், வீட்டுக்குச் சென்ற அவா், மாடியில் நின்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, அவா் தவறி கீழே விழுந்தாா்.

படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.