கோயம்புத்தூர்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போத்தனூா் - சென்னை சிறப்பு ரயில்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போத்தனூா் - சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போத்தனூா் - சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜனவரி 8-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் போத்தனூா் - சென்னை விரைவு ரயில் (எண்: 06194) மறுநாள் காலை 9.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும். மறுமாா்க்கமாக ஜனவரி 9-ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சென்னை சென்ட்ரல் - போத்தனூா் சிறப்பு ரயில் (எண்: 06193) மறுநாள் காலை 9.05 மணிக்கு போத்தனூா் நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என்று குறிப்பிட்டுள்ளது.
