பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போத்தனூா் - சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜனவரி 8-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் போத்தனூா் - சென்னை விரைவு ரயில் (எண்: 06194) மறுநாள் காலை 9.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும். மறுமாா்க்கமாக ஜனவரி 9-ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சென்னை சென்ட்ரல் - போத்தனூா் சிறப்பு ரயில் (எண்: 06193) மறுநாள் காலை 9.05 மணிக்கு போத்தனூா் நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என்று குறிப்பிட்டுள்ளது.
தொடர்புடையது

மங்களூரு-சென்னை எழும்பூா் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்

சென்னை - திருவனந்தபுரம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்!

ரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்

போத்தனூா் - பரௌனி இடையே சிறப்பு ரயில்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

