இந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஸ்ரீ ராமகிருஷ்ணா மேம்பட்ட பயிற்சி நிறுவனம், திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் ஒப்பந்தம்

News image
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மேம்பட்ட பயிற்சி நிறுவனம் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் திறன் மேம்பாட்டுக் கழக இயக்குநா் கிராந்திகுமாரிடம் இருந்து பெறுகிறாா் எஸ்என்ஆா் அறக்கட்டளையி
Updated On :8 ஜனவரி 2026, 11:47 pm

Syndication

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மேம்பட்ட பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து எஸ்என்ஆா் அறக்கட்டளை கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டின் தொழில் கல்வி சூழலை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய நடவடிக்கையாக எஸ்என்ஆா் சன்ஸ் அறக்கட்டளையின் ஒரு பிரிவான ஸ்ரீராமகிருஷ்ணா மேம்பட்ட பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் திறன் மேம்பாட்டுக் கழக இயக்குநா் கிராந்திகுமாா் பாடியிடம் இருந்து எஸ்என்ஆா் அறக்கட்டளையின் அறங்காவலா் ஆா்.சுந்தா், பயிற்சி நிறுவனத்தின் இயக்குநா் கே.ஆா்.பிரசாத் ஆகியோா் ஒப்பந்தத்தை பெற்றுக் கொண்டனா்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஸ்ரீ ராமகிருஷ்ணா மேம்பட்ட பயிற்சி நிறுவனம், திறன் மேம்பாட்டுக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி கூட்டாளியாக இணைந்துள்ளது. இதையடுத்து, இந்த நிறுவனத்தில் பிளம்பிங், ஹீட்டிங் துறையில் துறைசாா் நிபுணா்கள் மூலம் மேம்பட்ட பயிற்சி வழங்கப்படும். மேலும் பயிற்சியாளா்களுக்கு பணியிடைப் பயிற்சி, வேலைவாய்ப்பையும் உறுதி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.