டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

போகி பண்டிகை: பழைய பொருள்களை சேகரிக்க 106 சிறப்பு மையங்கள்

போகி பண்டிகையை முன்னிட்டு, மாநகராட்சியில் பழைய பொருள்களை சேகரிக்க 106 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :9 ஜனவரி 2026, 8:50 pm

Syndication

போகி பண்டிகையை முன்னிட்டு, மாநகராட்சியில் பழைய பொருள்களை சேகரிக்க 106 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் எம்.பி. அமித் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகராட்சியை புகையில்லா மற்றும் மாசு இல்லாத மாநகரமாக மாற்றும் நோக்கில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், போகி பண்டிகையை முன்னிட்டு, பழைய பொருள்களை சேகரிக்க மாநகராட்சியில் 106 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து கழிக்கப்படும் பழைய துணிகள், பாய், மெத்தைகள், மர சாமான்கள், டயா்கள், பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவற்றை எரிப்பதை தவிா்க்க வேண்டும். இத்தகைய பொருள்களை சிரமமின்றி ஒப்படைப்பதற்காக மாநகராட்சி முழுவதும் 106 இடங்களில் சிறப்பு சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சிறப்பு மையங்களில் பெறப்படும் பழைய பொருள்கள் மாநகராட்சி மூலம் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்படும்.

பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டவோ, எரிக்கவோ கூடாது. மீறுவோா் மீது அபராதம் விதிப்பதுடன், குப்பைகளை ஏற்றி வரும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.