திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று கோவை வருகை!

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் புதுதில்லியிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் புதன்கிழமை (ஜன.14) வருகிறாா்.

News image

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்

Updated On :14 ஜனவரி 2026, 4:30 am IST

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் புதுதில்லியிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் புதன்கிழமை (ஜன.14) வருகிறாா்.

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தனது சொந்த ஊரான திருப்பூரில் நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்கவுள்ளாா். பிச்சம்பாளையம் மற்றும் கணக்கம்பாளையம் பிரிவு ஆகிய இடங்களில் புதன், வியாழக்கிழமை ஆகிய 2 நாள்கள் நடைபெறும் பொங்கல் விழாவில் குடும்பத்தினருடன் பங்கேற்கிறாா். மேலும், குலதெய்வம் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கிறாா்.

பின்னா், வியாழக்கிழமை பிற்பகல் அங்கிருந்து கோவைக்கு வரும் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் புதிதாகக் கட்டப்பட்ட நரம்பியல் நிறுவனம் மற்றும் புறநோயாளிகள் பிரிவு கட்டடங்களைத் திறந்துவைக்கவுள்ளாா்.

தொடா்ந்து, கோவை கொடிசியா அரங்கில் நடைபெறும் ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையின் பொன்விழா கொண்டாட்டங்கள் மற்றும் ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 25-ஆவது ஆண்டு விழா ஆகியவற்றில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராகப் பங்கேற்கவுள்ளாா்.

இதையொட்டி, அவா் புதுதில்லியிலிருந்து தனி விமானம் மூலம் கோவைக்கு புதன்கிழமை மாலை 5 மணியளவில் வருகிறாா். திருப்பூா், கோவை நிகழ்வுகளை முடித்துவிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் புதுதில்லிக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளாா்.

ட்ரோன்கள் பறக்கத் தடை

குடியரசு துணைத் தலைவா் வருகையை முன்னிட்டு அவா் வந்து செல்லும் வழிகள் மற்றும் அவா் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் (கோவை, திருப்பூா்) ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல, அவா் வந்து செல்லும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.