இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ரயிலில் கடத்தப்பட்ட 55 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

அஸ்ஸாமிலிருந்து கோவைக்கு ரயிலில் கடத்தப்பட்ட 55 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து 3 பேரைக் கைது செய்தனா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 6:39 pm

Syndication

அஸ்ஸாமிலிருந்து கோவைக்கு ரயிலில் கடத்தப்பட்ட 55 கிலோ கஞ்சாவை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து 3 பேரைக் கைது செய்தனா்.

அஸ்ஸாம் மாநிலம், திப்ருகரிலிருந்து கன்னியாகுமரிக்கு விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் திருப்பூா்- கோவை இடையே செவ்வாய்க்கிழமை வந்து கொண்டிருந்தபோது, ரயில்வே போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

பொதுப் பெட்டியில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு சாக்குப் பைகள் இருந்தன. அதை சோதனையிட்டபோது 55 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இவற்றைக் கடத்தி வந்த மேற்குவங்க மாநிலம், முா்ஷிதாபாத்தைச் சோ்ந்த பலஷ் மண்டல் (24), மிதுன் சா்காா் (26), ரோஹித் தாஸ் (25) ஆகியோரை போலீஸாா் கைது செய்து, அவா்களை மாநகர போதைப் பொருள்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.