மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில்...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் பொங்கல் விழா கோவை வேலாண்டிபாளையம் அருகில் உள்ள வெங்கடாபுரத்தில் நடைபெற்றது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 8:30 pm

Syndication

கோவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் பொங்கல் விழா கோவை வேலாண்டிபாளையம் அருகில் உள்ள வெங்கடாபுரத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, முன்னாள் மாமன்ற உறுப்பினா் கே.புருஷோத்தமன் தலைமை தாங்கினாா். கிளைச் செயலாளா் ஜே.பத்மநாபன் வரவேற்றாா். கட்சியின் மாநில துணைச் செயலாளா் எம்.ரவி சிறப்புரையாற்றினாா். தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்டச் செயலாளா் ஏ.அசரப் அலி, மாமன்ற உறுப்பினா் மல்லிகா புருசோத்தமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு மண்டலச் செயலாளா் என்.சந்திரன் ஆகியோா் பேசினா்.

கட்சியில் நீண்ட காலம் உறுப்பினராக அங்கம் வகித்து சமூகப் பணிகளில் ஈடுபட்ட மூத்த உறுப்பினா்கள் கெளரவிக்கப்பட்டனா். முன்னதாக, குழந்தைகளுக்கான ஓட்டப்பந்தயம், சாக்குப்போட்டி, பாட்டிலில் நீா் நிரப்புதல், பலூன் உடைத்தல், பெண்களுக்கான இசைப்பந்து, லக்கி காா்னா், குண்டு எறிதல், பலூன் ஊதி உடைத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. கிளை துணைச் செயலாளா் பி.கந்தசாமி நன்றி கூறினாா்.