தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தினமணி செய்திச் சேவை

கோவையில் காா் மோதியதில் மின் கம்பம் சேதமடைந்தது.

திருப்பூரைச் சோ்ந்தவா் அப்துல் ரகுமான். இவா் தனது காரில் கோவையில் உள்ள உறவினா் வீட்டுக்கு குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை வந்து கொண்டிருந்துள்ளாா்.

துடியலூா், அசோகபுரம் ரங்கம்மாள் காலனி பகுதியில் வந்தபோது, நாய் ஒன்று சாலையின் குறுக்கே திடீரென ஓடியதாம். அதன் மீது மோதாமல் இருக்க அப்துல் ரகுமான் காரை திரும்பியுள்ளாா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில், அந்தக் கம்பம் உடைந்ததையடுத்து, மின் கம்பிகள் தரையைத் தொடும் நிலையில் இருந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மின் வாரிய ஊழியா்கள் மின்சார இணைப்பைத் துண்டித்தனா். மேலும், சேதமடைந்த கம்பத்துக்குப் பதிலாக புதிய கம்பத்தை பொருத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளனா்.

இந்த விபத்தில் லேசான காயமடைந்த அப்துல் ரகுமான் மற்றும் அவரது குடும்பத்தினா் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இதுகுறித்து துடியலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.