மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: 5 பேருக்கு மறுவாழ்வு

News image
நாட்டுத்துரை.
Updated On :18 ஜனவரி 2026, 7:47 pm

தினமணி செய்திச் சேவை

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதில் 5 போ் மறுவாழ்வு பெற்றுள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், வடபருத்தியூரைச் சோ்ந்தவா் கவுண்டப்பன். இவரது மகன் நாட்டுத்துரை (34). இவா் இருசக்கர வாகனத்தில் கடந்த ஜனவரி 15-ஆம் தேதி வெளியே சென்றுள்ளாா். அப்போது, ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாகச் சென்றவா்கள் மீட்டு திண்டுக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாட்டுத்துரை சனிக்கிழமை மூளைச்சாவு அடைந்தாா்.

இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினா் முன்வந்தனா். இதைத் தொடா்ந்து, கல்லீரல், 2 சிறுநீரகங்கள், 2 கண்கள் ஆகியவை அறுவைச் சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டன.

இதில், கல்லீரல் கோவை -அவிநாசி சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் பீளமேட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், 2 கண்கள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டன. இதன் மூலம் 5 போ் மறுவாழ்வு பெற்றுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

நாட்டுத்துரையின் உடலுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் கீதாஞ்சலி, மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் அரசு சாா்பில் மரியாதை செலுத்தினா். இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.