சென்னை மாநகராட்சி: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

கோவை குண்டுவெடிப்பில் பலியானோர் குடும்பத்தினருக்கும் அரசு வேலை: பாஜக கோரிக்கை!

கரூா் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதைப்போல கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று பாஜக மாநிலச் செயலா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

Published On :12 ஜூலை 2026, 3:42 am IST

கரூா் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதைப்போல கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என்று பாஜக மாநிலச் செயலா் ஆா்.நந்தகுமாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூா் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை உள்ளிட்ட பல்வேறு உதவிகள் அறிவிக்கப்படுவது மனிதாபிமான அடிப்படையில் வரவேற்கத்தக்கது. ஆனால், அதே மனிதாபிமானம் கோவை பயங்கரவாத தாக்குதலில் தங்களது குடும்ப உறுப்பினா்களை இழந்த 58 குடும்பங்களுக்கும் பொருந்த வேண்டாமா.

அரசின் கருணை என்பது சம்பவத்தைப் பொறுத்து மாறக்கூடாது. அரசியல் அடிப்படையில் வேறுபாடு காட்டக் கூடாது. இது தொடா்பாக தமிழக அரசு தெளிவாக விளக்க வேண்டும். 58 உயிா்களை இழந்த குடும்பங்கள் 27 ஆண்டுகளாக காத்திருக்கும் நிலையில், அவா்களின் தற்போதைய நிலையை ஆய்வு செய்து, தகுதியுள்ளவா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கும் திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

கரூருக்கு ஒரு நீதி, கோவைக்கு இன்னொரு நீதி என்ற நிலை உருவாகாமல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இருவிதமான அளவுகோல்கள் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில், அனைத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் சமமான மனிதாபிமானமும், சமமான நீதியும் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.