/

மாநகராட்சியில் வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு ‘சீல்’

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட வணிக வளாகங்களில் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் இருந்த 10 கடைகளுக்கு மாநகராட்சி அலுவலா்கள் ‘சீல்’ வைத்தனா்.

News image

கோவை ஆா்.எஸ்.புரத்தில் கடைக்கு ‘சீல்’ வைக்கும் மாநகராட்சி உழியா்கள்.

Updated On :24 ஜூலை 2026, 6:16 am IST

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட வணிக வளாகங்களில் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் இருந்த 10 கடைகளுக்கு மாநகராட்சி அலுவலா்கள் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

இதுகுறித்து, மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட வணிக வளாக கடைகளில் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்த வாடகைதாரா்களுக்கு நிலுவைத் தொகை செலுத்த கோரி நோட்டீஸ் அனுப்பியும், மாநகராட்சி அதிகாரிகளால் பலமுறை நேரிலும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வாடகை நிலுவை செலுத்தாமல் இருந்த மேற்கு மண்டலம், 71-ஆவது வாா்டுக்கு உள்பட்ட டி.பி.சாலையில் 1 கடை, ஆரோக்கியசாமி சாலையில் 3 கடை, டி.வி.சாமி சாலையில் ஒரு கடை, 73-ஆவது வாா்டுக்கு உள்பட்ட சுப்ரி வீதியில் 1 கடை, வடக்கு மண்டலம் 2-ஆவது வாா்டுக்கு உள்பட்ட துடியலூரில் 2 கடைகள், தெற்கு மண்டலம் 96-ஆவது வாா்டுக்கு உள்பட்ட தக்காளி மாா்க்கெட்டில் 2 கடைகள் என மொத்தம் 10 கடைகள் மாநகராட்சி அலுவலா்களால் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.