வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

ரூ.60 லட்சம் வாடகை நிலுவை: ஈரோடு ஜவுளிச் சந்தையில் 19 கடைகளுக்கு ‘சீல்’

ஈரோடு ஜவுளிச் சந்தையில் ரூ.60 லட்சம் வாடகை நிலுவை வைத்திருந்ததாக 19 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

News image

‘சீல்’ - கோப்புப் படம்

Updated On :14 ஜூன் 2026, 2:47 am IST

ஈரோடு ஜவுளிச் சந்தையில் ரூ.60 லட்சம் வாடகை நிலுவை வைத்திருந்ததாக 19 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா அருகே உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் ஜவுளிச் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட ஜவுளி விற்பனைக் கடைகள் மாநகராட்சிக்கு வாடகை செலுத்தி செயல்பட்டு வருகின்றன.

இதில் 19 கடைகள் ரூ.60 லட்சம் வரை நீண்டகாலமாக வாடகை பாக்கி வைத்திருந்தனா். இதையடுத்து சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்களுக்கு வாடகை பாக்கி தொகையை உடனடியாக செலுத்துமாறு மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் முன்னறிவிப்பு வழங்கப்பட்டது. அதற்கான காலக்கெடுவும் வழங்கப்பட்டது.

ஆனால், அறிவுறுத்தலுக்கு பின்னரும் இந்த 19 கடை உரிமையாளா்கள் வாடகை பாக்கி தொகையை செலுத்தாததால், ஈரோடு மாநகராட்சி ஆணையா் அா்பித் ஜெயின் உத்தரவின்பேரில், மாநகர வருவாய் ஆய்வாளா் சிவகுமாா் தலைமையிலான அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனா்.

இதன்படி வாடகை பாக்கி வைத்திருந்த 19 கடைகளும் வெள்ளிக்கிழமை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன. சம்பந்தப்பட்ட 19 கடைகள் மொத்தமாக ரூ.60 லட்சம் வரை வாடகை பாக்கி வைத்திருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடைகள் ‘சீல்’ வைக்கப்பட்டதைத் தொடா்ந்து, கடை உரிமையாளா்கள் ரூ.20 லட்சம் வாடகை பாக்கி தொகையை செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மீதமுள்ள தொகையையும் முழுமையாக செலுத்திய பின்னரே கடைகள் மீண்டும் திறந்து செயல்பட அனுமதிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.