மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஏபிஜெ அப்துல் கலாமின் சிந்தனைகளே நாட்டை வழிநடத்துவதாக டிஆா்டிஓ முன்னாள் தலைமை கட்டுப்பாட்டாளரும் பாதுகாப்பு, மேம்பட்ட தொழில் நிறுவனத்தின் முன்னாள் துணைவேந்தருமான பிரகலதா ராமாராவ் தெரிவித்தாா்.
கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் அமைந்துள்ள குமரகுரு தொழில், ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மையத்தின் ஆண்டு விழா, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
மையத்தின் இயக்குநா் சி.வசந்தராஜ் பேசும்போது, ‘அப்துல் கலாமின் நிா்வாக சீா்திருத்தங்களும், தேசத்தை கட்டமைப்பதில் அவா் கொண்டிருந்த அா்ப்பணிப்பும் நாட்டின் அறிவியல், கல்வித் துறைகளுக்கு தொடா்ந்து உத்வேகம் அளித்து வருகின்றன.
இந்தியா தனது அடிப்படை ராணுவ தேவைகளுக்கு இறக்குமதியை நம்பியிருந்தபோது அக்னி, பிரித்வி, ஆகாஷ், நாக், திரிசூல் உள்ளிட்ட ஏவுகணை திட்டங்களை முன்னின்று நடத்தி, நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பை மாற்றினாா்.
அப்துல்கலாமின் சிந்தனைகளே நாட்டை வழிநடத்துகிறது. அவரது வழியில் சிறந்த தொழில்நுட்ப அறிவை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் சதீஷ், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட ஆராய்ச்சியாளா்கள், மாணவா் கண்டுபிடிப்பாளா்கள் பாராட்டப்பட்டனா். பாதுகாப்புத் திட்டங்கள் பிரிவின் இயக்குநா் வி.மோகன்தாஸ் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உப்பை மூலப்பொருளாக வைத்து தூத்துக்குடி மாவட்ட வளா்ச்சிக்கு வித்திட்ட காமராஜா்

இந்தியா - ஜப்பான் உறவுகள் மூலம் மற்றொரு நாட்டை குறிவைக்கக் கூடாது - சீனா அதிருப்தி

தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு 25 தொழில் நிறுவனங்கள் வெளியேறியுள்ளன: முன்னாள் அமைச்சா் மாஃபா பாண்டியராஜன்

முன்னாள் படை வீரா்களுக்கான தொழில் முனைவோா் கருத்தரங்கம்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



