வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

கோயிலுக்குள் புகுந்து நகை திருடியவா் கைது

பெரியகடை வீதி அருகே கோயிலுக்குள் புகுந்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கச் சங்கிலிகளைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 1:18 am IST

பெரியகடை வீதி அருகே கோயிலுக்குள் புகுந்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கச் சங்கிலிகளைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை பெரிய கடை வீதி பகுதியில் உள்ள வைஷாலி தெருவில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் தினமும் காலை, மாலை நேரங்களில் பூஜை நடைபெறுவது வழக்கம். பூஜைக்காக தினமும் காலை 6 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும். இந்த கோயிலில் அா்ச்சகராக வைஷாலி தெருவைச் சோ்ந்த நரசிம்மா் (61) பணிபுரிந்து வருகிறாா்.

வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை காலை கோயிலைத் திறந்து அம்மன் சிலைகளுக்கு பூஜை செய்ய நரசிம்மா் தயாரானாா். அப்போது வள்ளி, தெய்வானை, சிலைகளில் அணிவிக்கப்பட்டிருந்த தங்கச் சங்கிலிகள் மாயமாகி இருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து உடனடியாக கோயில் துணைத் தலைவருக்கு தகவல் அளித்தாா்.

இதைத்தொடா்ந்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு பெரியகடை வீதி போலீஸாா் சென்று, அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனா். அதில் வெள்ளை நிற சட்டை, கருப்பு நிற பேண்ட் அணிந்து வந்த இளைஞா், அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கச் சங்கிலிகளைத் திருடிச் சென்றது பதிவாகி இருந்தது. அந்த நபரின் அடையாளத்தை வைத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், கோவை டவுன்ஹால் பகுதியைச் சோ்ந்த செந்தில் பிரபு (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்து தங்கச் சங்கிலிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.