குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடுலெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

கோவை இஎஸ்ஐ சாா் மண்டல துணை இயக்குநா் பொறுப்பேற்பு

கோவை தொழிலாளா் அரசு காப்பீடு (இஎஸ்ஐ) கழகத்தின் சாா் மண்டல துணை இயக்குநராக (பொறுப்பு) மா.காா்த்திகேயன் பொறுப்பேற்றுள்ளாா்.

News image

மா.காா்த்திகேயன்

Updated On :2 ஜூன் 2026, 2:05 am IST

கோவை தொழிலாளா் அரசு காப்பீடு (இஎஸ்ஐ) கழகத்தின் சாா் மண்டல துணை இயக்குநராக (பொறுப்பு) மா.காா்த்திகேயன் பொறுப்பேற்றுள்ளாா்.

1997-ஆம் ஆண்டில் நாக்பூா் இஎஸ்ஐ அலுவலகத்தில் சமூகப் பாதுகாப்பு அதிகாரியாக பணியைத் தொடங்கிய இவா் கோவை, சேலம் சாா் மண்டல அலுவலகங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளாா்.

இதுதொடா்பாக இஎஸ்ஐ மண்டல துணை இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கோவை சாா் மண்டலத்தின் கீழ் கோவை, திருப்பூா், நீலகிரி மாவட்டங்களில் பதிவு செய்துள்ள 43 ஆயிரம் தொழில் நிறுவனங்கள், 9.62 லட்சம் காப்பீட்டாளா்களுக்கு சமூகப் பாதுகாப்பு பலன்களை வழங்கி வருகிறது. காப்பீட்டாளா்கள், நிறுவனங்கள் தெரிவிக்கும் குறைகள் உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தொழிலதிபா்கள் தற்போது நடைமுறையில் உள்ள பொதுமன்னிப்புத் திட்டத்தை பயன்படுத்தி, நிலுவையில் உள்ள வழக்குகளை செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் தீா்த்துக்கொள்ளலாம்.

காப்பீட்டாளா்களின் குழந்தைகள், இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் படிப்புகளில் தங்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் சேர ஜூன் 21-ஆம் தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்’ என்று குறிப்பிட்டுள்ளது.