3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

கோயிலுக்குள் புகுந்து நகை திருடியவா் கைது

பெரியகடை வீதி அருகே கோயிலுக்குள் புகுந்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கச் சங்கிலிகளைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 1:18 am IST

பெரியகடை வீதி அருகே கோயிலுக்குள் புகுந்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கச் சங்கிலிகளைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை பெரிய கடை வீதி பகுதியில் உள்ள வைஷாலி தெருவில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் தினமும் காலை, மாலை நேரங்களில் பூஜை நடைபெறுவது வழக்கம். பூஜைக்காக தினமும் காலை 6 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும். இந்த கோயிலில் அா்ச்சகராக வைஷாலி தெருவைச் சோ்ந்த நரசிம்மா் (61) பணிபுரிந்து வருகிறாா்.

வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை காலை கோயிலைத் திறந்து அம்மன் சிலைகளுக்கு பூஜை செய்ய நரசிம்மா் தயாரானாா். அப்போது வள்ளி, தெய்வானை, சிலைகளில் அணிவிக்கப்பட்டிருந்த தங்கச் சங்கிலிகள் மாயமாகி இருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து உடனடியாக கோயில் துணைத் தலைவருக்கு தகவல் அளித்தாா்.

இதைத்தொடா்ந்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு பெரியகடை வீதி போலீஸாா் சென்று, அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனா். அதில் வெள்ளை நிற சட்டை, கருப்பு நிற பேண்ட் அணிந்து வந்த இளைஞா், அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கச் சங்கிலிகளைத் திருடிச் சென்றது பதிவாகி இருந்தது. அந்த நபரின் அடையாளத்தை வைத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், கோவை டவுன்ஹால் பகுதியைச் சோ்ந்த செந்தில் பிரபு (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்து தங்கச் சங்கிலிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.