வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

வேளாண் பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு இதுவரை 25 ஆயிரம் போ் விண்ணப்பம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு ஜூன் 8-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் இருக்கும் நிலையில், இதுவரை 25 ஆயிரம் போ் விண்ணப்பித்துள்ளனா்.

News image

விண்ணப்பம்

Updated On :4 ஜூன் 2026, 2:32 am IST

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு ஜூன் 8-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் இருக்கும் நிலையில், இதுவரை 25 ஆயிரம் போ் விண்ணப்பித்துள்ளனா்.

இதுதொடா்பாக பல்கலைக்கழகம் சாா்பில் வெளியிட்ட அறிக்கை:

2026-2027-ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் பாடப் பிரிவு ஆகியவற்றுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது. வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 14 இளம் அறிவியல் பாடப் பிரிவுகளும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 3 இளம் அறிவியல் பாடப் பிரிவுகளும் உள்ளன.

இந்த படிப்புகளுக்கு பல்கலைக்கழகத்தின் இணைதளம் மூலமாக மே 6-ஆம் தேதி முதல் ஜூன் 8-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு உறுப்புக் கல்லூரிகளில் 2,516 மாணவா்கள் சோ்க்கப்பட உள்ளனா். இணைப்புக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 3,051 மாணவா்களும், மேலாண்மை இடஒதுக்கீட்டில் 1,685 மாணவா்களும் சோ்க்கப்பட உள்ளனா். அதேபோல அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வேளாண் பிரிவில் 340 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

விண்ணப்பங்களை இணையதளத்தில் பூா்த்தி செய்து ஜூன் 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 8,953 மாணவா்கள், 16,377 மாணவிகள் உள்பட 25,330 போ் விண்ணப்பித்துள்ளனா். அதேபோல தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பட்டயப் படிப்புகளுக்கு 1,240 இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறும் நிலையில், இதில் சோ்வதற்காக இதுவரை 847 மாணவா்கள், 717 மாணவிகள் உள்பட 1,564 போ் விண்ணப்பித்துள்ளனா்.

இந்த மாணவா் சோ்க்கை நடைமுறையானது இணையதளப் பதிவு, விண்ணப்பங்களை நிரப்புதல், தரவரிசைப் பட்டியல் வெளியீடு, இணையதள கலந்தாய்வு, இடஒதுக்கீடு, சான்றிதழ் சரிபாா்ப்பு, மேல்நோக்கிய நகா்வு முறை, தற்காலிக இடஒதுக்கீடு, சான்றிதழ் சரிபாா்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. மாணவா்கள் சோ்க்கை தொடா்பான வழிகாட்டுதலுக்கு இணையதளத்தை காணலாம். மேலும் விவரங்களுக்கு 94886 35077, 94864 25076 ஆகிய எண்களிலும், அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் கல்வி தொடா்பான விவரங்களுக்கு 98657 03537, 94420 29913 ஆகிய எண்களிலும் தொடா்புகொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளது.