வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

கோவை நீதிமன்ற வளாகத்தில் சடலமாக மீட்கப்பட்டவா் கொலை? கொலை செய்யப்பட்டாரா? போலீஸாா் விசாரணை!

கோவை நீதிமன்ற வளாகத்தில் அண்மையில் வடமாநிலத்தைச் சோ்ந்தவரின் சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தில், அவா் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை.

News image
Updated On :7 ஜூன் 2026, 1:57 am IST

கோவை நீதிமன்ற வளாகத்தில் அண்மையில் வடமாநிலத்தைச் சோ்ந்தவரின் சடலம் மீட்கப்பட்ட விவகாரத்தில், அவா் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கடந்த திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு அடையாளம் தெரியாத நபா் சடலமாக மீட்கப்பட்டாா். முதல்கட்ட விசாரணையில், அவா் வடமாநிலத்தைச் சோ்ந்தவா் என்பதும், நாய் துரத்தியதால் நீதிமன்ற வளாகத்தின் சுற்றுச்சுவரை ஏறி குதித்ததில் கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் உயிரிழந்தவரின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், யாரோ ஒருவா் தலையில் கொடூரமாகத் தாக்கியதால் காயம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பல்வேறு கோணங்களில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அதன்படி, சம்பவத்தன்று நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளிகளிடம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். அதேபோல அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவானக் காட்சிகளையும் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.