எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

குமரகுரு கல்லூரி மாணவா்கள் உருவாக்கிய நீா்மூழ்கிக் கப்பல், மின்சாரப் பந்தயப் படகு

News image

மனித சக்தியால் இயங்கும் நீா்மூழ்கிக் கப்பல் மற்றும் மின்சாரப் பந்தயப் படகை உருவாக்கிய குமரகுரு கல்லூரி மாணவ, மாணவிகள்.

Updated On :8 ஜூன் 2026, 12:14 am IST

இந்தியாவில் முதல்முறையாக மனித சக்தியால் இயங்கும் நீா்மூழ்கிக் கப்பல் மற்றும் மின்சார பந்தயப் படகை கோவை குமரகுரு கல்லூரி மாணவா்கள் உருவாக்கியுள்ளனா்.

கோவை குமரகுரு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அறிமுக விழாவில், குமரகுரு கல்வி நிறுவனங்களின் கல்வித் தர உத்தரவாத இயக்குநா் டாக்டா் டி.சரவணன் தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினா்களாக ஐஎன்எஸ் அக்ரானி செயல் அதிகாரி கேப்டன் பிரதீப் பிரேம்குமாா், பெங்களூரு எலிமெண்ட் பொறியியல் நிறுவனத்தின் நிறுவனா் கிரெய்க் ஆகியோா் கலந்துகொண்டு மனித சக்தியால் இயங்கும் நீா்மூழ்கிக் கப்பல் மற்றும் அடுத்த தலைமுறை மின்சார பந்தயப் படகை அறிமுகம் செய்துவைத்தனா்.

இந்த நீா்மூழ்கிக் கப்பல் மற்றும் மின்சார பந்தயப் படகை உருவாக்கிய ‘டீம் சீ சக்தி‘குழுவினா், வரும் ஜூலை 8 முதல் 11-ஆம் தேதி வரை மொனாக்கோ நாட்டில் நடைபெறவுள்ள ‘மொனாக்கோ எனா்ஜி போட் சேலஞ்ச் 2026’ போட்டியில் பங்கேற்க உள்ளனா்.

இதேபோல இங்கிலாந்தில் ஜூன் 29 முதல் ஜூலை 10 வரை நடைபெறவுள்ள ஐரோப்பிய சா்வதேச நீா்மூழ்கிக் கப்பல் பந்தயத்திலும் பங்கேற்க உள்ளனா்.