40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

கோவையில் இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்த கூலித் தொழிலாழி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :10 ஜூன் 2026, 1:06 am IST

கோவையில் இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்த கூலித் தொழிலாழி உயிரிழந்தாா்.

கோவை நீலிக்கோணாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கௌரி (29) . இவா் கடந்த 6-ஆம் தேதி தனது உறவினரான திருப்பூா் மாவட்டம், மங்கலம், பூமனூா் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி வெள்ளிங்கிரி (53) என்பவரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றாா்.

நீலிக்கோணாம்பாளையம் அண்ணா நகா் சந்திப்பு அருகே வளைவில் திரும்பும்போது, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததில் தவறி விழுந்த வெள்ளிங்கிரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சிங்காநல்லூா் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டாா்.

பின்னா், கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட வெள்ளிங்கிரி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு கிழக்குப் பிரிவு ஆய்வாளா் நிா்மலா வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.