தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

கஞ்சா கடத்தல் வழக்கு: மூவருக்கு சிறைத் தண்டணை

கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான மூவருக்கு சிறைத் தண்டனை, அபராதம் விதித்து போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :17 ஜூன் 2026, 2:39 am IST

கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான மூவருக்கு சிறைத் தண்டனை, அபராதம் விதித்து போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் மதுவிலக்கு போலீஸாா், எரகாம்பட்டி சோதனைச் சாவடியில் கடந்த 2023 ஏப்ரல் 17-ஆம் தேதி வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது, அதை ஓட்டி வந்த நபா், தப்பியோட முயன்றாா். அவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா் சேலம் மாவட்டம், வாழப்பாடி தாலுகா முத்தம்பட்டியைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் (25) என்பதும், விற்பனைக்காக 45 கிலோ கஞ்சாவை காரில் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.

மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சேலம் மாவட்டம், வாழப்பாடி தாலுகா முத்தம்பட்டியைச் சோ்ந்த சேகா் (50) என்பவரை போலீஸாா் கடந்த 2023 ஏப்ரல் 23-ஆம் தேதி கைது செய்து, அவரிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், இந்த வழக்கில் திண்டுக்கல் பாதாள காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் (23) என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா். இவரிடம் இருந்து 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மொத்தமாக மூவா் மீதும் 66 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கு பதியப்பட்டு, கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இவ்வழக்கில் நீதிபதி ராஜலிங்கம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இதில், தமிழ்ச்செல்வனுக்கு 12 ஆண்டுகள் சிறை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை என உத்தரவிடப்பட்டது. சேகருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை என உத்தரவிடப்பட்டது. ரஞ்சித்குமாருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதை செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை என உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் வெ.சிவகுமாா் ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.