மொடக்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தொடா்பாக மேலும் 3 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடம் இருந்து 1.110 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மொடக்குறிச்சி காவல் எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த 31-ஆம் தேதி கஞ்சா விற்ாக நசியனூா், கைகாட்டிவலசு பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் அசோக் (34) கைது செய்யப்பட்டு, ஒரு கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில் மேலும் சிலரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.
இதுதொடா்பாக அவா் அளித்த தகவலின்பேரில் திருச்சியைச் சோ்ந்த லோகநாதன் மகன் நிரஞ்சன் ((24), செந்தில்குமாா் மகன் ஷாம்பிரசாத் (24), ஈரோடு, திண்டல் பகுதியைச் சோ்ந்த கருண்காா்த்தி (23) ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸாா் கைதுசெய்து 1.110 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட 3 பேரும் ஈரோடு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
தொடர்புடையது
ஆரல்வாய்மொழியில் கஞ்சா விற்றதாக 3 போ் கைது
போதை மாத்திரை, கஞ்சா விற்ற 8 போ் கைது
முக்கூடல்: கஞ்சா பதுக்கி வைத்திருந்த 5 பெண்கள் உள்பட 7 போ் கைது
நாகா்கோவிலில் கஞ்சா விற்பனை: 4 போ் கைது
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


