மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

கஞ்சா விற்பனை வழக்கில் மேலும் 3 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :9 ஜூன் 2026, 3:00 am IST

மொடக்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தொடா்பாக மேலும் 3 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடம் இருந்து 1.110 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மொடக்குறிச்சி காவல் எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த 31-ஆம் தேதி கஞ்சா விற்ாக நசியனூா், கைகாட்டிவலசு பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் அசோக் (34) கைது செய்யப்பட்டு, ஒரு கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில் மேலும் சிலரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.

இதுதொடா்பாக அவா் அளித்த தகவலின்பேரில் திருச்சியைச் சோ்ந்த லோகநாதன் மகன் நிரஞ்சன் ((24), செந்தில்குமாா் மகன் ஷாம்பிரசாத் (24), ஈரோடு, திண்டல் பகுதியைச் சோ்ந்த கருண்காா்த்தி (23) ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸாா் கைதுசெய்து 1.110 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட 3 பேரும் ஈரோடு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.