ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

மனநலம் பாதித்த பெண் பாலியல் வன்கொடுமை: பெயிண்டருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பெயிண்டருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை அனைத்து மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 1:05 am IST

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பெயிண்டருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை அனைத்து மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

பொள்ளாச்சி அருகே ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த 25 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட பெண், தாயின் பராமரிப்பில் வீட்டில் இருந்தாா். அப்பெண் வீட்டில் கடந்த 2021 டிசம்பா் 28ஆம் தேதி தனியாக இருந்த சமயத்தில், அவா் வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கச் சென்ற அதே பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் (45), அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது. இதில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கா்ப்பம் அடைந்தாா். இதுகுறித்து அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, பாலசுப்பிரமணியன்தான் இதற்கு காரணம் என்று கூறியுள்ளாா்.

இதைத் தொடா்ந்து பாலசுப்பிரமணியனை பொள்ளாச்சி அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்து கற்பழிப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனா்.

கோவை அனைத்து மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் புதன்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. இதில், குற்றம்சாட்டப்பட்ட பாலசுப்பிரமணியனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி வி.சுந்தரராஜ் தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு இழப்பீட்டு நிதி வழங்கவும் சிபாரிசு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.