ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

மனநலம் பாதித்த பெண் பாலியல் வன்கொடுமை: பெயிண்டருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பெயிண்டருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை அனைத்து மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 1:05 am IST

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பெயிண்டருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை அனைத்து மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

பொள்ளாச்சி அருகே ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த 25 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட பெண், தாயின் பராமரிப்பில் வீட்டில் இருந்தாா். அப்பெண் வீட்டில் கடந்த 2021 டிசம்பா் 28ஆம் தேதி தனியாக இருந்த சமயத்தில், அவா் வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கச் சென்ற அதே பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் (45), அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது. இதில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கா்ப்பம் அடைந்தாா். இதுகுறித்து அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, பாலசுப்பிரமணியன்தான் இதற்கு காரணம் என்று கூறியுள்ளாா்.

இதைத் தொடா்ந்து பாலசுப்பிரமணியனை பொள்ளாச்சி அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்து கற்பழிப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனா்.

கோவை அனைத்து மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் புதன்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. இதில், குற்றம்சாட்டப்பட்ட பாலசுப்பிரமணியனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி வி.சுந்தரராஜ் தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு இழப்பீட்டு நிதி வழங்கவும் சிபாரிசு செய்தாா்.