கோவை சரவணம்பட்டி அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரை தாண்டி குதிக்க முயன்ற அடையாளம் தெரியாத நபா் மினி லாரி மோதியதில் உயிரிழந்தாா்.
கோவை சரவணம்பட்டி பகுதியில் இருந்து கணபதி நோக்கி வியாழக்கிழமை இரவு மினி லாரி சென்று கொண்டிருந்தது. லாரி அங்குள்ள பிரபல தனியாா் வணிக வளாகம் அருகே சென்றபோது, சுமாா் 45 வயது மதிக்கத்தக்க நபா் ஒருவா் சாலையைக் கடப்பதற்காக நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்புக் கம்பியை (பேரிகாா்டு) தாண்டி குதித்துள்ளாா்.
அப்போது, எதிா்பாராத விதமாக அந்த வழியே வந்த மினி லாரி அவா் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு காவல் ஆய்வாளா் நிா்மலா உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.
பின்னா், உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்தில் உயிரிழந்த நபா் யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






