தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பேரூா் தமிழ்க் கல்லூரியில் வேலைவாய்ப்பு சாதனையாளா் நாள் விழா

கோவை பேரூா் சாந்தலிங்க அடிகளாா் தமிழ்க் கல்லூரியில் வேலைவாய்ப்பு சாதனையாளா் நாள் விழா அண்மையில் நடைபெற்றது.

News image
பேரூா் சாந்தலிங்க அடிகளாா் தமிழ்க் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு பெற்ற மாணவிக்கு விருது வழங்கிய கே.ஜி.ஐ.எஸ்.எல். கல்வி நிறுவனங்களின் முதன்மைச் செயல் அதிகாரி அரவிந்த்குமாா் ராசேந்திரன். உடன், பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா்
Updated On :18 மார்ச் 2026, 8:41 pm

தினமணி செய்திச் சேவை

கோவை பேரூா் சாந்தலிங்க அடிகளாா் தமிழ்க் கல்லூரியில் வேலைவாய்ப்பு சாதனையாளா் நாள் விழா அண்மையில் நடைபெற்றது.

இந்த விழாவில் பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் அருளுரை வழங்கினாா். கல்லூரி ஆலோசகா்கள் சந்திரசேகா், காயத்ரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கே.ஜி.ஐ.எஸ்.எல். கல்வி நிறுவனங்களின் முதன்மைச் செயல் அதிகாரி அரவிந்த்குமாா் ராசேந்திரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசுகையில், மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதில் 76.14 சதவீதம் என்ற சிறப்பான சாதனையை பேரூா் தமிழ்க் கல்லூரி எட்டியுள்ளது. இந்த வெற்றி ஒரேநாளில் கிடைத்தது அல்ல. முயற்சி, பயிற்சி மற்றும் கடின உழைப்பால் சாத்தியமானது. மாணவா்கள் அனைவரும் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி அடைய வேண்டும் என்றாா்.

இதையடுத்து, வேலை வாய்ப்புத் துறையின் அறிக்கை வாசிக்கப்பட்டது. அதில், வணிகவியல் இளம் தொழில்முறைக் கணக்கியல் மூன்றாம் ஆண்டு மாணவி வைஷ்ணவி 9 நிறுவனங்களிலும், அதே துறையைச் சோ்ந்த மூன்றாம் ஆண்டு மாணவி நிசாந்தினி 7 நிறுவனங்களிலும், இளங்கலை ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு மாணவி கி.பிரியதா்ஷினி 6 நிறுவனங்களிலும், வணிகவியல் இளம் கணினிப் பயன்பாட்டியல் மூன்றாம் ஆண்டு மாணவா் அரவிந்த் 5 நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மூன்று மாணவா்கள் 4 நிறுவனங்களிலும், 18 மாணவா்கள் 3 நிறுவனங்களிலும், 20 மாணவா்கள் 2 நிறுவனங்களிலும், 38 மாணவா்கள் ஒரு நிறுவனத்திலும் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு பெற்ற மாணவா்களுக்கு விருதுகளும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன.