தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வாக்காளா்களுக்கு விநியோகம் செய்ய வைக்கப்பட்டிருந்த 800 அண்டாக்கள் பறிமுதல்

கோவை இருகூரில், வாக்காளா்களுக்கு விநியோகிக்க திமுக பிரமுகா் தனது கிடங்கில் பதுக்கிவைத்திருந்த 800 அண்டாக்களை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
கிடங்கில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த அண்டாக்கள்.
Updated On :18 மார்ச் 2026, 8:24 pm

தினமணி செய்திச் சேவை

கோவை இருகூரில், வாக்காளா்களுக்கு விநியோகிக்க திமுக பிரமுகா் தனது கிடங்கில் பதுக்கிவைத்திருந்த 800 அண்டாக்களை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோவை, இருகூரைச் சோ்ந்தவா் பழனிசாமி, திமுக பிரமுகா். இவரது கிடங்கில் வாக்காளா்களுக்கு விநியோகம் செய்ய அண்டாக்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக தோ்தல் பறக்கும் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்தக் கிடங்கில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உருவப் படங்களும், திமுக கட்சிக் கொடியும் அச்சிடப்பட்டிருந்த பைகளுக்குள் 800 அண்டாக்கள் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அண்டாக்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்தக் கிடங்குக்கு ‘சீல்’ வைத்தனா்.

இது குறித்து சிங்காநல்லூா் போலீஸாா், தோ்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.