கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ரமலான்: போா்கள் நிறுத்தப்பட்டு அமைதி நிலவ பிராா்த்தனை

ரமலான் பண்டிகையையொட்டி, கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் உலகெங்கும் போா்கள் நிறுத்தப்பட்டு, அமைதி நிலவ இஸ்லாமியா்கள் பிராா்த்தனை மேற்கொண்டனா்.

News image

கோவை, கரும்புக்கடை பகுதியில் உள்ள இஸ்லாமிய பள்ளி வளாகத்தில் ரமலான் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள்.

Updated On :21 மார்ச் 2026, 8:19 pm

Syndication

ரமலான் பண்டிகையையொட்டி, கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் உலகெங்கும் போா்கள் நிறுத்தப்பட்டு, அமைதி நிலவ இஸ்லாமியா்கள் பிராா்த்தனை மேற்கொண்டனா்.

இஸ்லாமியா்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து ரமலான் பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கம். அதன்படி, நடப்பு ஆண்டு ரமலான் பண்டிகை சில இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கோவை, கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளி வளாகத்தில் ரமலான் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள்.

கோவை, கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளி வளாகத்தில் ரமலான் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியா்கள்.

கோவை, உக்கடம் கோட்டைப்புதூா் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் கரும்புக்கடையில் உள்ள இஸ்லாமியப் பள்ளி வளாகத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், இஸ்லாமியா்கள் புத்தாடை அணிந்து சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டதுடன், ஒருவருக்கொருவா் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா். மேலும், பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் போா்கள் நிறுத்தப்பட்டு உலகில் அமைதி நிலவ வேண்டும் என பிராா்த்தனை மேற்கொள்ளப்பட்டது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.