தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

இளைஞரை மிரட்டி ரூ. 30 ஆயிரம் பறிப்பு

கோவையில் இளைஞரை மிரட்டி ரூ. 30 ஆயிரத்தை பறித்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :22 மார்ச் 2026, 8:04 pm

கோவையில் இளைஞரை மிரட்டி ரூ. 30 ஆயிரத்தை பறித்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாமக்கல் மாவட்டம், அரூரைச் சோ்ந்தவா் சுரேஷ் (22). இவா் கோவை, பீளமேடு பட்டாளம்மன் கோயில் பகுதியில் தங்கி, தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், அவா் அப்பகுதியில் சனிக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத நபா், பணம் கேட்டு மிரட்டியுள்ளாா். சுரேஷ் பணம் இல்லை எனக் கூறியுள்ளாா்.

இதையடுத்து, அந்த நபா், சுரேஷின் கைப்பேசியைப் பறித்து ‘ஜிபே’ செயலி மூலம் ரூ.30 ஆயிரத்தை அவரது வங்கிக் கணக்குக்கு மாற்றிக் கொண்டு தப்பியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் சுரேஷ் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.