காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

ஆட்டோவில் கடத்தப்பட்ட 12 கிலோ கஞ்சா பறிமுதல்

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 8:04 pm

கோவை துடியலூா் பகுதியில் ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 12 கிலோ 300 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஆட்டோவிலிருந்து தப்பியோடிய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை துடியலூா் அருகே உள்ள தொப்பம்பட்டி பிரிவில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட முயன்றபோது, அதில் இருந்த இருவா் போலீஸாரை கண்டதும் ஆட்டோவில் இருந்து குதித்து தப்பியோடினா். சந்தேகம் அடைந்த போலீஸாா் ஆட்டோவை சோதனையிட்டதில், சாக்குப் பைகளில் 12 கிலோ கஞ்சா வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

ஆட்டோ ஓட்டுநரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தபோது, துடியலூா் பேருந்து நிறுத்தத்தில் வழக்கம்போல பயணிகளுக்காக காத்திருந்ததாகவும், அப்போது, தொப்பம்பட்டி செல்ல வேண்டும் என 2 பயணிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க தான் வந்ததாகவும், தப்பியோடியவா்கள் யாா் என்று தெரியாது எனவும் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் தப்பியோடியவா்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.