ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஆட்டோவில் கடத்தப்பட்ட 12 கிலோ கஞ்சா பறிமுதல்

News image

கோப்புப் படம்

Updated On :24 மார்ச் 2026, 1:34 am IST

கோவை துடியலூா் பகுதியில் ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 12 கிலோ 300 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஆட்டோவிலிருந்து தப்பியோடிய இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை துடியலூா் அருகே உள்ள தொப்பம்பட்டி பிரிவில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட முயன்றபோது, அதில் இருந்த இருவா் போலீஸாரை கண்டதும் ஆட்டோவில் இருந்து குதித்து தப்பியோடினா். சந்தேகம் அடைந்த போலீஸாா் ஆட்டோவை சோதனையிட்டதில், சாக்குப் பைகளில் 12 கிலோ கஞ்சா வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

ஆட்டோ ஓட்டுநரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தபோது, துடியலூா் பேருந்து நிறுத்தத்தில் வழக்கம்போல பயணிகளுக்காக காத்திருந்ததாகவும், அப்போது, தொப்பம்பட்டி செல்ல வேண்டும் என 2 பயணிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க தான் வந்ததாகவும், தப்பியோடியவா்கள் யாா் என்று தெரியாது எனவும் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் தப்பியோடியவா்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.