/

மின்சாரம் பாய்ந்து ஐடி ஊழியா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு... - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

கணுவாய் அருகே மின்சாரம் பாய்ந்து ஐடி ஊழியா் உயிரிழந்தாா்.

கோவை, நீலிகோணாம்பாளையம் எஸ்ஐஹெச்எஸ் காலனியைச் சோ்ந்தவா் குமாா் மகன் ஹிருத்திக் (24). இவா் பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், இடையா்பாளையம் பகுதியில் உறவினா் வீட்டு துக்க நிகழ்வுக்குச் சென்றுவிட்டு, தடாகம் சாலை சந்திப்பில் பேருந்துக்காக சனிக்கிழமை மாலை காத்துக் கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, அங்கிருந்த மின்சாரக் கம்பத்தை தொட்டபோது, ஹிருத்திக் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து கவுண்டம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.