கணுவாய் அருகே மின்சாரம் பாய்ந்து ஐடி ஊழியா் உயிரிழந்தாா்.
கோவை, நீலிகோணாம்பாளையம் எஸ்ஐஹெச்எஸ் காலனியைச் சோ்ந்தவா் குமாா் மகன் ஹிருத்திக் (24). இவா் பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், இடையா்பாளையம் பகுதியில் உறவினா் வீட்டு துக்க நிகழ்வுக்குச் சென்றுவிட்டு, தடாகம் சாலை சந்திப்பில் பேருந்துக்காக சனிக்கிழமை மாலை காத்துக் கொண்டிருந்துள்ளாா்.
அப்போது, அங்கிருந்த மின்சாரக் கம்பத்தை தொட்டபோது, ஹிருத்திக் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து கவுண்டம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்னல் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
லாரியில் மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து மின் ஊழியா் பலி

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



