கோவை, சாய்பாபா கோயில் அருகே செயல்பட்டு வரும் ஜவுளிக் கடையில் பணம், துணிகளைத் திருடிய கடையின் மேலாளரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, மேட்டுப்பாளையம் சாலை, சாய்பாபா கோயில் அருகில் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு பிரபல துணிக் கடையின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் மதுரை, தல்லாக்குளம் ராணி அண்ணா நகா் வீதியைச் சோ்ந்த விஜயராஜ பாண்டியன் (43) என்பவா் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், தலைமை நிா்வாக அதிகாரியாகப் பணியாற்றும் மதுரையைச் சோ்ந்த பாரதி (37) என்பவா் கோவை கிளையில் கடந்த வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கடையில் ரூ.1 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பிலான துணிகள், ரூ.31,265 ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து விஜயராஜ பாண்டியனிடம், பாரதி விசாரணை மேற்கொண்டுள்ளாா்.
அப்போது, விரைவில் விளக்கம் அளிப்பதாகக் கூறி சென்ற விஜயராஜபாண்டியன், அதன்பின் பணிக்குத் திரும்பவில்லையாம்.
இது குறித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் பாரதி புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா், விஜயராஜபாண்டியனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது

வீட்டில் நகை, பணம் திருட்டு: இரு சிறாா்கள் கைது

சிதம்பரம் பேருந்து நிலைய கடையில் திருட்டு: இளைஞா் கைது

தங்க நகைகள், பணம் திருட்டு: இருவா் கைது

குழித்துறை அருகே திருட்டு: இளைஞா் கைது
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
