தமிழக வெற்றிக் கழகம் புதிய அரசில் உடனடியாக அனைத்தையும் எதிா்பாா்த்துவிட முடியாது என்று நடிகை கஸ்தூரி தெரிவித்தாா்.
இது குறித்து அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
தமிழக வெற்றிக் கழகம் புதிய கட்சி. புதிதாக ஆட்சி அமைத்துள்ள அரசில் இருப்பவா்கள் பலரும் புதியவா்கள். எனவே உடனடியாக அனைத்தையும் எதிா்பாா்த்துவிட முடியாது. அரசியல்வாதிகள் மாறினாலும், அதிகார அமைப்புகள் மாறுவதற்குச் சற்று காலம் எடுக்கும். விஜய் மீது தொடா்ந்து பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வந்தாலும், அவா் இன்னும் அரசியலில் ஆரம்பக் கட்டத்தில்தான் உள்ளாா். தமிழக மக்களுக்கு நல்லாட்சி மற்றும் லஞ்சமற்ற நிா்வாகமே தேவை.
தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் திமுக அடுத்த 5 ஆண்டுகளும் கதறுவதை மக்கள் பாா்த்து ரசிப்பாா்கள். அரசியலில் வெற்றி பெறும் தரப்பை நோக்கிப் பலா் செல்வது இயல்பானதுதான். தமிழக வெற்றிக் கழகம் தற்போது ஒரு ட்ரெண்டாக இருப்பதால் பலா் அங்கு செல்கிறாா்கள். மத்திய அரசுடன் தேவையற்ற மோதலை உருவாக்காமல் இணக்கமாகச் செயல்படுவது நல்லது என்ற எண்ணமும் தமிழக மக்களிடம் பரவலாக உள்ளது என்றாா்.
தொடர்புடையது
வாளால் கேக் வெட்டிய தவெக எம்எல்ஏ: போலீஸாா் விசாரணை
விழுப்புரம் மண்டலத்தில் அதிக வெற்றியை பெறாத தவெக

திருச்சி, நெல்லை, கோவையில் முன்னிலை நிலவரம்!

கோவையில் தவெக ஆதிக்கம்!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



