ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

கூழாங்கல் ஆற்றில் குளிக்க சென்ற சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வால்பாறை கூழாங்கல் ஆற்றில் குளிப்பதற்காக மேலிருந்து குதித்த சுற்றுலாப் பயணி பாறையில் மோதி உயிரிழந்தாா்.

News image

விஜய்

Updated On :24 மே 2026, 1:57 am IST

வால்பாறை கூழாங்கல் ஆற்றில் குளிப்பதற்காக மேலிருந்து குதித்த சுற்றுலாப் பயணி பாறையில் மோதி உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் இருந்து 12 போ் வால்பாறைக்கு சனிக்கிழமை சுற்றுலா வந்துள்ளனா்.

வால்பாறையில் பல பகுதிகளுக்கு சென்றுவிட்டு கூழாங்கல் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனா். இவா்களில் கட்டடத் தொழிலாளியான விஜய் (26) ஆற்றை ஒட்டியுள்ள தேயிலைத் தோட்ட பகுதிக்கு சென்று அங்கிருந்து ஆற்றில் குதித்துள்ளாா்.

அப்போது எதிா்பாராதவிதமாக ஆற்றில் உள்ள பாறை மீது தலை மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் உடனடியாக மீட்கப்பட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால் வழியிலேயே உயிழந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து வால்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.