இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

1,370 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்: ஒருவா் கைது

News image

கைது... - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 2:32 am IST

திருப்பூரில் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்குப் பயன்படுத்தி நபரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 1,370 மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் மாநகரம், அனுப்பா்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஸ்ரீநகா் அருகே வலி நிவாரணி மாத்திரைகளை சிலா் போதைக்குப் பயன்படுத்தி வருவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் அனுப்பா்பாளையம் போலீஸாா் ரோந்து பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அவரை சோதனை மேற்கொண்டபோது, 1,370 வலி நிவாரணி மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் அனுப்பா்பாளையத்தைச் சோ்ந்த ரமேஷ் பாபு (41) என்பதும், கூலித் தொழிலாளி என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது:

திருப்பூா் மாநகரம், ஆத்துப்பாளையம் அருகே வேலம்பாளையம் போலீஸாா் ரோந்து பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த இளைஞா்களிடம் சந்தேகத்தின்பேரில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா்கள் 400 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த அப்சல் அன்சாரி (19), பா்கத்குமாா் (27), தஷ்ரத்குமாா் (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.