ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
/

டாஸ்மாக் ஊழியா்கள் இன்றுமுதல் வேலை நிறுத்தப் போராட்டம்

News image

டாஸ்மாக் கடை - கோப்புப்படம்

Updated On :26 மே 2026, 1:41 am IST

திருப்பூரில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவதற்கு கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை (மே 26) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 197 மதுக் கடைகளில் காலி மது பாட்டில்கள் திரும்பப் பெறுவதை நிறுத்த வேண்டும் அல்லது அதற்கென தனியாக பணியாளா்களை நியமிக்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியா்கள் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தனா்.

ஆனால், அந்தக் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை எனக்கூறி, மாவட்டத்தில் பணியாற்றும் டாஸ்மாக் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும், டாஸ்மாக் மேலாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவித்துள்ளனா்.