குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தீண்டாமை சுற்றுச்சுவரை அகற்றக் கோரிக்கை

News image

கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 1:40 am IST

திருப்பூா், சூசையாபுரம் காலனி, ராயபுரம் பகுதியை இணைக்கும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தீண்டாமை சுற்றுச்சுவரை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாநகராட்சி, 37-ஆவது வாா்டில் ராயபுரம் , சூசையாபுரம் காலனி ஆகிய பகுதிகள் உள்ளன. இந்நிலையில், உயா் ஜாதியினா் வசிக்கக்கூடிய ராயபுரம் சித்தப்பா அவென்யூ சாலையும், பட்டியல் இன மக்கள் வசிக்கும் சூசையாபுரம் காலனி சாலையும் இணையும் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் தீண்டாமை சுவா் கட்டப்பட்டது.

இதை அகற்றக் கோரி பல்வேறு அமைப்பினா் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்தும் தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சுவா் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவா்கள், தொழிலாளா்கள் சுமாா் 1 கி.மீ. தொலைவு சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது.

இது குறித்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாநில ஆணையத்துக்கு பல்வேறு அமைப்பினா் புகாா் மனு அனுப்பியுள்ளனா். இந்நிலையில், தீண்டாமை சுவரை உடனடியாக அகற்ற வேண்டும் என பட்டியல் இன மக்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு மனு அனுப்பியுள்ளனா்.