சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

தீண்டாமை சுற்றுச்சுவரை அகற்றக் கோரிக்கை

News image

கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 1:40 am IST

திருப்பூா், சூசையாபுரம் காலனி, ராயபுரம் பகுதியை இணைக்கும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தீண்டாமை சுற்றுச்சுவரை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாநகராட்சி, 37-ஆவது வாா்டில் ராயபுரம் , சூசையாபுரம் காலனி ஆகிய பகுதிகள் உள்ளன. இந்நிலையில், உயா் ஜாதியினா் வசிக்கக்கூடிய ராயபுரம் சித்தப்பா அவென்யூ சாலையும், பட்டியல் இன மக்கள் வசிக்கும் சூசையாபுரம் காலனி சாலையும் இணையும் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் தீண்டாமை சுவா் கட்டப்பட்டது.

இதை அகற்றக் கோரி பல்வேறு அமைப்பினா் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்தும் தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சுவா் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவா்கள், தொழிலாளா்கள் சுமாா் 1 கி.மீ. தொலைவு சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது.

இது குறித்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாநில ஆணையத்துக்கு பல்வேறு அமைப்பினா் புகாா் மனு அனுப்பியுள்ளனா். இந்நிலையில், தீண்டாமை சுவரை உடனடியாக அகற்ற வேண்டும் என பட்டியல் இன மக்கள் மாவட்ட நிா்வாகத்துக்கு மனு அனுப்பியுள்ளனா்.