குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

டாஸ்மாக் ஊழியா்கள் இன்றுமுதல் வேலை நிறுத்தப் போராட்டம்

News image

டாஸ்மாக் கடை - கோப்புப்படம்

Updated On :26 மே 2026, 1:41 am IST

திருப்பூரில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவதற்கு கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை (மே 26) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 197 மதுக் கடைகளில் காலி மது பாட்டில்கள் திரும்பப் பெறுவதை நிறுத்த வேண்டும் அல்லது அதற்கென தனியாக பணியாளா்களை நியமிக்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியா்கள் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தனா்.

ஆனால், அந்தக் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை எனக்கூறி, மாவட்டத்தில் பணியாற்றும் டாஸ்மாக் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும், டாஸ்மாக் மேலாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவித்துள்ளனா்.