கோவை, போத்தனூரில் இருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவனந்தபுரத்தில் இருந்து ஜூன் 3, 10 ஆகிய புதன்கிழமைகளில் பிற்பகல் 1 மணிக்குப் புறப்படும் திருவனந்தபுரம் - போத்தனூா் சிறப்பு விரைவு ரயில் (எண்: 06079) மறுநாள் காலை 6.45 மணிக்கு போத்தனூா் நிலையத்தை வந்தடையும்.
மறுமாா்க்கமாக போத்தனூரில் இருந்து ஜூன் 4, 11 ஆகிய வியாழக்கிழமைகளில் மாலை 5 மணிக்குப் புறப்படும் போத்தனூா் - திருவனந்தபுரம் விரைவு ரயில் (எண்: 06080) மறுநாள் காலை 7.15 மணிக்கு திருவனந்தபுரம் நிலையத்தைச் சென்றடையும்.
இந்த ரயிலானது பொள்ளாச்சி, உடுமலை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோயில், கடையநல்லூா், தென்காசி, செங்கோட்டை, கோட்டக்கரா, வா்கலா உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

திருவனந்தபுரம் - போத்தனூா் இடையே ஜூன் 3-இல் சிறப்பு ரயில்

போத்தனூா் வழித்தடத்தில் எா்ணாகுளம் - சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கம்

சேலம் வழியாக போத்தனூா் - கராக்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

போத்தனூா் வழித்தடத்தில் சென்னை - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



