விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

"பின்தங்கியுள்ள தாளவாடி வட்டாரத்தை முன்னேற்ற நடவடிக்கை'

கல்வி, சுகாதாரம், தனிநபர் வருவாய் ஆகியவற்றில் பின்தங்கியுள்ள தாளவாடி வட்டாரத்தை முன்னேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலர் (பொ) சுகாதாதத் உறுதி அளித்துள்ளார்.

News image
Updated On :13 செப்டம்பர் 2014, 11:14 pm

சதீஷ்

கல்வி, சுகாதாரம், தனிநபர் வருவாய் ஆகியவற்றில் பின்தங்கியுள்ள தாளவாடி வட்டாரத்தை முன்னேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலர் (பொ) சுகாதாதத் உறுதி அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில சமச்சீர் வளர்ச்சி நிதித் திட்டத்தின்கீழ், தாளவாடி வட்டாரத்துக்கான மாதிரி தொலைநோக்கு திட்டம் தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

தாளவாடி வட்டாரத்தை பின்தங்கிய நிலையிலிருந்து முன்னேற்றமடையச் செய்வதற்கான மாநில திட்டக்குழு ஆணையத்தின்படி இப்பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதியில் வாழும் மக்கள் குறைந்தபட்ச வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

இப்பகுதியில் உயர்கல்வி நிறுவனங்கள் இல்லை. வன விலங்குகளால் விவசாய பாதிப்பு ஏற்படுவது போன்ற விவரங்கள் ஆய்வின்போது கண்டறியப்பட்டன. தாளவாடி வட்டாரம் கல்வி, சுகாதாரம் மற்றும் தனிநபர் வருமானம் ஆகியவற்றில் பின்தங்கியிருப்பதால் முன்னேற்றம் அடைய தனித்துவம் வாய்ந்த நீடித்த, நிலைத்த தன்மையுடைய பணிகளுக்கு முன்மொழிவு பெறப்பட்டு, மாநில சமச்சீர் வளர்ச்சி நிதித்திட்டத்தின் கீழ் நிதிக்கட்டுப்பாடின்றி அனுமதி வழங்கப்படும்.

தாளவாடி வட்டாரத்தை பின்தங்கிய நிலையில் இருந்து மாற்றுவதற்கு ஒவ்வொரு துறையின் மூலமாக என்ன திட்டங்களை செயல்படுத்தவேண்டும் என்பதை முன்மொழிவாக அனுப்பவேண்டும்.

இப்பகுதியில் பாசன வசதி இல்லை. மழைநீரை நம்பியே வேளாண்மை நடைபெறுகிறது. விவசாயிகள், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு போதிய விலை கிடைப்பதற்கும் மற்றும் வேளாண் பொருள்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்வதற்கும் இத்திட்டத்தின் மூலமாக ஏற்பாடு செய்யப்படும்.

அரசுத் துறைகள் மாநில திட்டக்குழு ஆணையத்துக்கு அனுப்பிய முன்மொழிவுகளின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு திட்டத்துக்கும் முழு வடிவம் கொடுக்கப்பட்டு இத்திட்டம் 5 ஆண்டுகளுக்குள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு, தாளவாடி வட்டாரம் உயர் நிலைக்கு கொண்டு வரப்படும் என்றார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் மாவட்ட திட்டமிடுதல் கூடுதல் இயக்குநர் பி.செல்வராஜன், புள்ளியியல் துறை இணை இயக்குநர் கே.ஜெயகாந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.சுமதி, பவானிசாகர் சட்டப்பேரவை உறுப்பினர் பி.எல்.சுந்தரம், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் எஸ்.ஆர்.செல்வம், தாளவாடி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கெம்பாமணி சென்னஞ்சிப்பா உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.