அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் மூழ்கி இருவர் சாவு

பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் குளிக்கச் சென்ற நண்பர்கள் இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 10:50 pm

DIN

பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் குளிக்கச் சென்ற நண்பர்கள் இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம், நெத்திமேடு ஆண்டிக்கவுண்டர் காலனியைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் புஷ்பராஜ் (33). தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றினார்.  சேலம் மருத்துவக் கல்லூரி ஓம் சக்தி நகரைச் சேர்ந்தவர் பாலகுமார் மகன் டான் பிரவீண் (32).   இவர், ஈரோடு அரசு மருத்துவமனையில் கணினி பிரிவில் பணியாற்றினார். இருவரும்  நண்பர்கள்.
இந்நிலையில், ஈரோட்டுக்கு புதன்கிழமை வந்த புஷ்பராஜ், பிரவீணுடன் சேர்ந்து பவானி அருகே காலிங்கராயன் அணைக்கட்டுக்குச் சென்று வாய்க்காலுக்குத் தண்ணீர் திறக்கப்படும் மதகின் உள்பகுதியில் இறங்கிக் குளித்துக் கொண்டிருந்தனர்.
எதிர்பாராமல் ஆழமான பகுதிக்குச் சென்ற இருவரும் தண்ணீரில் மூழ்கியதோடு, வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்களின் இருசக்கர வாகனம், உடமைகள் கரைமீது இருப்பதைக் கண்ட பொதுமக்கள் சித்தோடு போலீஸாருக்கும், பவானி தீயணைப்பு நிலையத்துக்கும் புதன்கிழமை மாலை தகவல் தெரிவித்தனர். இரவு நேரமானதால் தேடும் பணி மேற்கொள்ளப்படவில்லை.
வியாழக்கிழமை காலை அப்பகுதியில் உள்ள மயானம் அருகே வாய்க்காலில் புஷ்பராஜின் சடலம் மீட்கப்பட்டது. வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு, சுண்ணாம்பு ஓடை வரையில் சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு டான் பிரவீண் சடலத்தைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அணையின் மதகுக்கு அருகிலேயே இவரின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து, இருவரின் சடலத்தையும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த சித்தோடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.