கள் இயக்க கோரிக்கைகளை ஏற்காவிட்டால் சென்னையில் அசுவமேத யாகம் நடத்தப்படும் என்று கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி கூறினார்.
தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் பனை, தென்னை பாதுகாப்பு பரப்புரை பயணத்தை அதன் ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி கோவையில் திங்கள்கிழமை தொடங்கினார். கோவையில் இருந்து ஈரோடு வந்த அவர் மேலும் கூறியதாவது:
கள் இறக்குவதும், பருகுவதும் அரசியல் அமைப்புச் சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை. இது உலகளாவிய நடைமுறையாகும். எனவே, 30 ஆண்டுகால கள் தடையை நீக்க வேண்டும். நிபந்தனைகள் இல்லாமல் நீரா இறக்கி, உள்நாட்டிலும், உலக அளவிலும் அரசின் தலையீடு இல்லாமல் சந்தைப்படுத்தினால் திட்டம் முழுமையாக வெற்றி அடையும்.
பனை, தென்னை கருப்பட்டிக்கு மானியம் கொடுத்து ரேஷன் கடைகளில் அவற்றை மக்களுக்கு விநியோகிக்க வேண்டும். கலப்படம் செய்வோருக்கு கருணை காட்டாமல் கடும் தண்டனை விதிக்க வேண்டும். எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோவையில் இருந்து சென்னை வரை பரப்புரை பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை புதன்கிழமை சந்தித்து கோரிக்கைகள் வலியுறுத்தப்பட உள்ளன.
எங்களுடைய கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கோரிக்கையை ஏற்காவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கையாக வரும் ஜனவரி 21 ஆம் தேதி சென்னையில் அசுவமேத யாகம் நடத்தி, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்சார வாகனத்துக்கான ஊக்கத் தொகை திட்டம்: 2028 மாா்ச் 31 வரை நீட்டிப்பு; மானியம் பாதியாகக் குறைப்பு

கௌதம் அதானிக்கு எதிரான குற்றவியல் வழக்கு: அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி
காலிறுதிக்கு முன்னேறியது நார்த்ஈஸ்ட் யுனைடெட்!

புற்றுநோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக அறிவிக்கை செய்ய வேண்டும்: 19 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!


