வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

எம்.ஜி.ஆர். நினைவு தினம்

Updated On :25 டிசம்பர் 2018, 5:52 am IST

ஈரோட்டில்...
ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாநகர் மாவட்ட செயலாளரும்,  மேற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான கே.வி.இராமலிங்கம், கிழக்கு சட்டப் பேரவை உறுப்பினர் கே.எஸ்.தென்னரசு  ஆகியோர் தலைமை வகித்து எம்.ஜி.ஆர். உருவச் சிலைக்கு  மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
   இதில், முன்னாள்  மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே.சி.பழனிசாமி,  முன்னாள் மண்டலத் தலைவர் பெரியார் நகர் மனோகரன், பகுதி செயலாளர்கள் சூரம்பட்டி ஜெகதீஷ், கேசவமூர்த்தி, முருகுசேகர் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பெருந்துறையில்...
பெருந்துறை தொகுதி அதிமுக சார்பில், எம்.ஜி.ஆரின் 31 ஆவது நினைவு தினத்தையொட்டி, அவரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. 
பெருந்துறை, குன்னத்தூர் நான்கு சாலை சந்திப்பு அருகில் எம்.ஜி.ஆரின் உருவப் படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் தலைமையில், கட்சியினர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.  இதில், பெருந்துறை ஒன்றியச் செயலாளர் விஜயன், ஊத்துக்குளி ஒன்றியச் செயலாளர் சி.டி.ரவிசந்திரன், ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எஸ்.பரியசாமி, வேளாண் கூட்டுறவு விற்பனை சங்க துணைத் தலைவர் டி.டி.ஜெகதீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.