தனியார் தொழிற்சாலையில் தீ

பெருந்துறை அருகே, தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், கணினிகள் எரிந்து சேதமடைந்தன. 
Published on

பெருந்துறை அருகே, தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், கணினிகள் எரிந்து சேதமடைந்தன. 
பெருந்துறை சிப்காட்டில் தனியார் சாயத் தொழிற்சாலை உள்ளது. இங்கு கணினி அறையில் உள்ள ஒரு கணினி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. 
இதுகுறித்து, பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு அலுவலர் வேலுசாமி தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சில மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 
இதில் சர்வர் அறையில் இருந்த கணினிகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தாக தெரிகிறது. இந்த தீ விபத்து மின் கசிவால் ஏற்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com